மார்த்தாண்டத்தில் நெடுஞ்சாலையில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பள்ளம்: கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

கருங்கல்: தென்னிந்தியாவில்  மிக நீளமான இரும்பு மேம்பாலம் மார்த்தாண்டத்தில் உள்ளது. மார்த்தாண்டம் கல்லூரியின் அருகில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையில் கடந்த ஒரு மாதம் முன்  குடிநீர் பைப்பில் கசிவு ஏற்பட்டது. அதை சரி செய்ய பள்ளம் தோண்டினர். பழுதான பைப்பை சரி செய்தனர். அப்போது தொலைதொடர்பு கேபிள் சேதமடைந்துள்ளது. இதனால் கேபிள் பணி மேற்கொள்வதற்காக தோண்டிய பள்ளத்தை அப்படியே விட்டு சென்றனர். கேபிள் சீரமைத்த பின்னரும் அந்த பள்ளம் மூடப்படவில்லை. இவ்வாறு 2 மாதம் ஆன பின்னரும் அந்த பள்ளம் நிரப்பப்படாமல் உள்ளது.

இதுபோல் வெட்டுமணி பகுதியிலும் தோண்டப்பட்ட 2 பள்ளங்கள் அப்படியே கிடக்கிறது. இந்த பள்ளங்களால் வாகன போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளாகிறது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பெரிய விபத்து ஏற்பட்டு உயிர் பலி வாங்கும் அபாயமும் உள்ளது. எனவே உடனடியாக சாலையில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தை நிரப்பி சாலையை செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: