தென்தாமரைகுளம்: தென்தாமரைகுளம் பகுதியில் உள்ள வடக்குதாமரைகுளம், பள்ளகுளம், கரும்பாட்டூர்குளம், வால்குளம், கவக்குளம், அச்சங்குளம், புன்னேரிகுளம் உள்பட பல்வேறு குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் பொது மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குளங்களில் தண்ணீர் இல்லாததால் அந்த பகுதியில் உள்ள சுமார் 50 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது ஒருபுறம் இருக்க சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா சமீபத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோடையின் வறட்சி காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுவதை அறிந்ததே.