லண்டன்: உலகின் பருவநிலை மாற்றங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார். கார்பன்-டை-ஆக்சைடை அதிகளவு வெளியேற்றும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்தாலும், அந்த நாட்டை விட இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் காற்று மாசுபாடு அதிகளவில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, மூன்று நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், லண்டனில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, 2017-ம் ஆண்டு பாரிஸ் நகரில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்றது. அதில் உலக வெப்பமயமாதலை தடுக்க பல்வேறு நாடுகள் ஒப்புக்கொண்டன. ஆனால் இந்தியா, ரஷியா, சீனா போன்ற நாடுகள் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து எந்தவித முயற்ச்சியும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.