கொடைக்கானல்: கொடைக்கானில் நடந்த நாய்கள் கண்காட்சியில் பல்வேறு இன நாய்கள் பங்கேற்று திறமையை நிரூபித்தது. நாயின் உரிமையாளர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பிரையண்ட் பூங்காவில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், நாய்கள் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் சைபீரியன் ஹஸ்கி, கிரேட்டேன், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட், பாக்சர், பொமரேனியன் மற்றும் பீகில்ஸ் உள்பட 12 ரகங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.