சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொகிதீன் பேசியதாவது:
இந்தி திணிப்பு என்றவுடன் நாடே எதிர்த்துள்ளது. இது மத்தியில் ஆளும் அரசு தமிழகத்தை ஒதுக்கியுள்ளார்கள் என்பதற்கு அடையாளம். தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான். அந்த சட்டத்தை இன்றுள்ள அரசு நிறைவேற்றவில்லை. கலைஞர் கொண்டுவந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், இந்தி திணிப்பு தமிழகத்தில் இருக்காது. மீண்டும் அந்த திட்டத்தை நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.