திருச்சி அருகே தூவாக்குடி சுங்கச்சாவடியில் ஊழியர்கள், கார் ஓட்டுநர்கள் இடையே தகராறு

திருச்சி: திருச்சி மாவட்டம் தூவாக்குடி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் கார் ஓட்டுனர்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சென்னையில் இருந்து தஞ்சைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 2 கார்களில் சென்றுள்ளனர். தூவாக்குடி சுங்கச்சாவடியில் ஒரே நபர் 2 கார்களுக்கும் சுங்கக்கட்டணம் செலுத்தியதாக கூறும் வகையில் அதனை சுங்கச்சாவடி ஊழியர்கள் மறுத்துள்ளனர். இரண்டு கார்களுக்கான கட்டணத்தை பெற்றுக்கொண்டு ஒரு காருக்கான மட்டுமே ரசீது தருவதாக கார் ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை தொடர்ந்து இருதரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மற்றோருபுரம் சுங்கச்சாவடியில் அடுத்தடுத்து நின்ற வாகன ஓட்டுநர்கள் கூச்சலிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Related Stories: