புவனேஸ்வர்: ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில், ஆளும் பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. முதல்வராக நவீன் பட்நாயக் 5வது முறையாக பதவியேற்றார். இத்தேர்தலில் பிஜு ஜனதா தளம் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112ல் அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் இவர் பிஜப்பூர், ஹின்ஜிலி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், பிஜப்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை நேற்று அவர் ராஜினாமா செய்தார். ஹின்ஜிலி தொகுதியின் எம்எல்ஏ.வாக அவர் தொடர்கிறார்.