சென்னை: சிக்னல் கிடைக்காத செல்போனை விற்பனை செய்த நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பூரை சேர்ந்தவர் வடிவேல். கடந்த 2016ம் ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.20 ஆயிரத்து 99 கொடுத்து செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த செல்போன் வாங்கிய நாள் முதல் சில கோளாறுகள் ஏற்பட்டு வந்துள்ளது. முக்கியமாக நெட்வர்க் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் வடிவேல் அவதி அடைந்து வந்துள்ளார். மேலும் தொடுதிரையும் சரியாக வேலை செய்யவில்லை. இதுபற்றி சர்வீஸ் சென்டரில் பலமுறை புகார் அளித்தும் சரி செய்ய முடியவில்லை.