வேலூர்: குடியாத்தம் அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலரை மணல் கொள்ளையர்கள் கடத்தி சென்றதாக கூறபபடுகிறது. இந்நிலையில் அனங்காநல்லூர் விஏஓ அனேஷ் குமாரை, டிராக்டரில் கடத்திச் சென்ற கொள்ளை கும்பல் அவரை மாதனூரில் இறக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.