தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. 2018-19ம் நிதியாண்டில் நிகர லாபம் ரூ.258.58 கோடியாக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைவர் அண்ணாமலை, தலைமை நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2018-19ம் நிதியாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மொத்த வணிகத்தில் 9.91% வளர்ச்சி அடைந்து ரூ.62,165.66 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகை ரூ.35,136.25 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடன்களை பொறுத்தமட்டில் ரூ.27,029.41 கோடி என்ற நிலையில் உள்ளது. விவசாயம், குறு, சிறு தொழில் கடன், வியாபாரக் கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வங்கியின் நிகர லாபம் ரூ.258.58 கோடி ஆகும். இது கடந்த ஆண்டு 221.92 கோடியாக இருந்தது.