புதுக்கோட்டை: பொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக நள்ளிரவில் 30 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்தும், அந்த சமூக பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசியும் வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ வைரலானது. ஒரு சமூகத்தினர் மற்றும் பெண்களை பற்றி வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்கினர்.