மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல மாநில தலைவர்கள், முதல்வர்கள், தொழிலதிபர்கள் ஜனாதிபதி மாளிகை வருகை

டெல்லி: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி மாளிகை வளாகத்துக்கு அமித்ஷா வருகை தந்துள்ளார். ரவிசங்கர் பிரசாத், ராம்விலாஸ் பாஸ்வான், நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்குர் ஆகியோர் வருகை தந்துள்ளனர். மேலும் மோடி பதவியேற்பு விழாவுக்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி, மனைவி நீட்டாவுடன் வந்துள்ளார. 2 வது முறையாக பிரதமர் பதவியேற்கும் விழாவையோட்டி ஜனாதிபதி மாளிகைக்கு தலைவர்கள் வந்துக்கொண்டுள்ளனர். அதேபோல் குடியரசு தலைவர் மாளிகைக்கு நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதாவுடன் வருகை தந்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பங்கேற்றுள்ளனர்.தமிழநாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். கர்நாடக முதல்வர் குமாரசாமி, மற்றும் பல மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் அமித்ஷா, நிதின் கட்கரி, ஸ்மிரிதி இரானி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கிர்கிஸ்தான், நேபாள், தாய்லாந்து, பூடான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: