திருச்சி: தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக திருச்சி என்.ஐ.டியில் விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. கணிப்பொறியில் நாம் தகவல்களை சேமிக்க பயன்படுத்தும் போல்டர் மாடலைப் போன்று,ஆராய்ச்சி கட்டுரைகள் அது தொடர்பான பதிவுகளை ஒரே இடத்தில், ஒரே குடையின் கீழ் சேமித்து வைப்பது அடைவு என அழைக்கப்படுகின்றது. இந்த வகையில் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா,ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள், பேராசிரியர்கள் ஆய்வு கட்டுரைகளை தயாரிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையம் செயல்படும்.