ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பெய்த திடீர் மழையால் கூகலூர் அரசு நெல் கொள்முதல் மையத்தில் விற்பனைக்காக வைத்திருந்த 11,500 நெல் மூட்டைகள் சேதம் அடைந்துவிட்டன. கூகலூர், மேவாணி, கரண்டிப்பாளையம்,முடச்சூர்,கரட்டூர்,கள்ளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கூகலூரில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட அரசு நெல் கொள்முதல் மையத்தில் விற்பனைக்காக விவசாயிகள் வைத்திருந்த 11,500 மூட்டை நெல் முற்றிலும் நனைந்து வீணாகிவிட்டது.