கோபி: கோபி அருகே உள்ள வேட்டுவன்புதூரில் சிறுத்தை தாக்கி 12 ஆடுகள் பலியாகின. கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வன பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்டது. இந்த வன பகுதியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காத நிலையில் வன விலங்குகள் வன எல்லை பகுதியில் உள்ள கிராமத்திற்குள் சென்று ஆடு உள்ளிட்ட கால்நடைகளை கொன்றும், விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வேட்டுவன்புதூரில் உள்ள ரவி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 11 ஆடுகளை கடித்து கொன்றது. சப்தம் கேட்டு வெளியில் வந்த ரவி ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் சிறுத்தை ஒரு ஆட்டை வன பகுதிக்குள் இழுத்து சென்றது தெரிந்தது.