புதுவண்ணாரப்பேட்டையில் பயங்கரம் பிரபல ரவுடி மகன் வெட்டி கொலை: மர்ம நபர்களுக்கு வலை

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை பிரபல ரவுடி ஒத்தவாடை பிரகாஷின் மகன் தினேஷ் மர்ம நபர்களால் நேற்று வெட்டி கொலை செய்யப்பட்டார். புதுவண்ணாரப்பேட்டை ஒத்தவாடை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பிரகாஷ். இவர், அப்பகுதியில் வழிப்பறி, ெகாலை முயற்சி, அடிதடி போன்ற சம்பங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.  தந்தை வெட்டி படுகொலை செய்யப்பட்ட பிறகு அவரது மகன் தினேஷ் (24), அப்பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி அடிதடி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை தினேஷ் அம்மணி அம்மன் தோட்டம் பகுதியில் நடந்து சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. உடனே, தினேஷ் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடியுள்ளார். ஆனால் மர்மநபர்கள் அவரை துரத்தி சென்று ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். இதில் தினேஷின் கை துண்டானது. தகவலறிந்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதில், தினேஷூக்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றதாகவும், அவருடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தினேஷ் எதற்காக வெட்டி படுகொலை செய்யப்பட்டார், யார் வெட்டியது என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: