வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலாயுதம் (50), பார்த்திபன் (55) வடசேரியில் பார்த்திபன் மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகள் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி பேசுவதற்காக பார்த்திபன், வேலாயுதம் இருவரும் நேற்று வடசேரிக்கு சென்றுவிட்டு மாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். வெங்கடாபுரம் கூட்ரோடு அருகே வந்த போது பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதியது.