டோக்கியோ: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சாதுர்யமானவர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான சந்திப்புக்கு பிறகு அந்நாட்டுடன் மோதல் போக்கை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கைவிட்டார். அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளையும் கைவிட்ட கிம் ஜாங் உன், மென்மையான போக்கை கடைபிடித்தது உலக நாடுகள் மத்தியில் வடகொரியா மீதான கண்ணோட்டம் மாறியது. இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் 27, 28-ந் தேதிகளில் வியட்நாமில் மீண்டும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.