ராபர்ட் வதேராவின் முன்ஜாமினை ரத்து செய்யக்கோரிய அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேராவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. அமலாக்கத்துறை மனு குறித்து பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ராபர்ட் வதேராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதனை தொடர்ந்து, ராபர்ட் வதேரா மீதான அமலாக்கத்துறை வழக்கை ஜூலை 17-க்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: