ஈரோடு: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் ஈரோடு திண்டலில் உள்ள ஓட்டலில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:எங்கள் கட்சி சார்பில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளோம். மக்களவையில் முதல்முறையாக எங்கள் கட்சி எம்பியை உருவாக்கி உள்ளோம். அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.தமிழக மக்கள் தெளிவான நல்ல தீர்ப்பை அளித்துள்ளனர். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை இம்முறை மக்கள் திமுக கூட்டணிக்கு நல்ல வித்தியாசமான தீர்ப்பை தந்துள்ளனர். இந்தியா முழுவதும் பாஜகவிற்கான அலை இருந்தாலும் தமிழகத்தில் தமிழக அரசுக்கு எதிரான அலை உருவாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான அலை இருந்ததால்தான் தற்போது நடந்த தேர்தலில் மோசமான தோல்வியை அவர்கள் கண்டுள்ளனர்.