திருமலை: மத்திய அமைச்சராக இருந்த என்டிஆர் மகள் புரந்தரேஸ்வரி, மக்களவை தேர்தலில் டெபாசிட் இழந்தார். அவரது கணவரும் தோல்வியை தழுவி உள்ளார்.ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 சட்டப்பேரவை, 22 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றது. குறிப்பாக விஜயநகரம், கடப்பா, நெல்லூர் உள்பட 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், விசாகப்பட்டினம் மக்களவை தொகுதியின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகளான புரந்தரேஸ்வரி பாஜ சார்பில் போட்டியிட்டார். இத்தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்விவி. சத்தியநாராயணா 4 லட்சத்து 36 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பரத் 4 லட்சத்து 32 ஆயிரத்து 492 வாக்குகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். ஆனால் புரந்தரேஸ்வரி 33,892 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.