சென்னை: கடன் தொகையை அடைத்த பிறகும், 6 ஆண்டு கழித்து கிரெடிட் கார்டுக்கு பணம் வசூலித்த வங்கிக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் ₹52 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. சென்னை, திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் முகபூர் ரஹ்மான். இவர் பாலவாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். மேலும் 3 கிெரடிட் கார்ட் (கடன் அட்டை) உபயோகித்து வந்துள்ளார். இந்தநிலையில், தனக்கு ஏற்பட்ட பணம் கஷ்டம் காரணமாக முகபூர் கடந்த 2009ம் ஆண்டு பணம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் பாலவாக்கத்தில் உள்ள வங்கியில் பேசி, கிரடிட் கார்டு மூலம் செலவு செய்த ₹89 ஆயிரத்தை 22 ஆயிரத்து 250 என 4 தவணையாக செலுத்தினார். இதேபோல் மற்றொரு கார்டில் வாங்கிய ₹38 ஆயிரம் பணத்தையும் 2 தவணையாக செலுத்தி 2010ம் ஆண்டில் நிலுவை முழுவதும் செலுத்தியுள்ளார்.