வத்திராயிருப்பு: மழை, விவசாயம் செழிக்க வேண்டி வத்திராயிருப்பில் இன்று காலை ஜல்லிக்கட்டு நடந்தது. 300க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மழை, விவசாயம் செழிக்க வேண்டி இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. காலை 8.30 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டை சிவகாசி ஆர்டிஓ தினகரன் துவக்கி வைத்தார். வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதன்பின் மதுரை, திருச்சி, வத்திராயிருப்பு, சேதுநாராயணபுரம், கூமாப்பட்டி, கான்சாபுரம் போன்ற ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சுற்றுக்கு 50 மாடுபிடி வீரர்கள் வீதம் 150 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.