சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் குறைந்துள்ள நிலையில், வேலூர், திருத்தணி ஆகிய இடங்களில் நேற்று 109 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில், வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி வெயில் என்னும் கத்திரி வெயில் காலம் முடிய இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் பல்வேறு இடங்களில் குறைய தொடங்கியுள்ளது. இதற்கிடையே, பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நேற்று கூடலூரில் 30 மிமீ மழை பெய்துள்ளது. பெரியாறு, குழித்துறை, பேச்சிப்பாறை, தேனி, நீலகிரி, திருச்செங்கோடு, நடுவட்டம் 20 மிமீ, பெரியகுளம், கரூர், வால்பாறை 10 மிமீ மழை பெய்துள்ளது.