ெசன்னை: மக்களவை தேர்தல் முடிவுகளை எண்ணி கூட்டணி கட்சியினர் கவலைப்பட வேண்டாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தேறுதல் அறிக்கை வௌியிட்டுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுக்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பே இறுதியானது என்ற அடிப்படையில் இந்த தேர்தல் முடிவுகளை பாமக ஏற்றுக்கொள்கிறது. பாமக தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்க வில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, சரி செய்து அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மக்களவை தேர்தல் முடிவுகளை எண்ணி பாமக மற்றும் கூட்டணியினர் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.