மக்களவை தேர்தல்: பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக் வாழ்த்து

டெல்லி: நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 347 வாக்குகள் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 90, திரிணாமுல் 23, மற்றவவை 82, இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதன்மூலம் மோடி தலைமையிலான பாஜக அரசு அதீத பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 2-வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள மோடிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு உலக நாட்டு பிரதமர்கள் என வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா வெற்றி பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் அதன் ஆணையை வழங்கியுள்ளது. இந்த பெரிய வெற்றிக்கு தலைவராக இருப்பது ஸ்ரீ நரேந்திரமோடிக்கு பல வாழ்த்துக்கள். இரண்டாவது இன்னிங்ஸ் இன்னும் சிறப்பாக இருக்கும் மற்றும் இந்தியா தொடர்ந்து முன்னேறும் மற்றும் அதிக உயரங்களை எட்டும்.ஜெய் ஹிந்த் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீரேந்தர் ஷேவாக் பதிவிட்டுள்ளார்.

Related Stories: