தருமபுரரி; தருமபுரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில்குமாரும், அதிமுக கூட்டணி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸூம் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணி 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.