லயோலா கல்லூரியில் நடைபெறுகிறது மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை

சென்னை: மத்திய சென்னை தொகுதிக்கான வாக்குகள் லயோலா கல்லூரியில் எண்ணப்படுகிறது. கல்லூரி நுழைவாயில் முதல் அனைத்து நுழைவு வாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்கள் எதுவும் கல்லூரிக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைபவர்கள்  சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அலுவலர்கள் மற்றும்  அரசியல் கட்சியினரின் செல்போன்கள் வாக்கு என்னும் மையத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் செல் செல்போன்களை பெறுவதற்காக தனி தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே செல்போன்களை ஒப்படைத்த பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் . பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும் முகவர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை உள்ளே கொண்டு செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை அந்த பட்டியலை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு பேப்பர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: