வாடிப்பட்டி: வாடிப்பட்டி தர்மராஜன் கோட்டையில் பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு விடிய விடிய பூப்பல்லக்கு நடந்தது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இயற்கை எழில்மிகுந்த சிறுமலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது தர்மராஜன் கோட்டை. இங்குள்ள குன்றின் மீது பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. இக்கோயிலில் 99வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாலாபிஷேக திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை தர்மராஜன் கோட்டையில் உள்ள கோயில் இருந்து பட்டுப்பல்லக்கில் புறப்பட்ட பாலதண்டாயுதபாணி வாடிப்பட்டி வருகை தந்து கள்ளர் மடத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்ட பாலதண்டாயுதபாணி வல்லபகணபதி கோயில் மண்டகப்படி சென்றடைந்தார்.