தர்மபுரி: ஒகேனக்கல் பண்ணப்பட்டி வனப்பகுதியில் வசிக்கும் இருளர் இன மலைவாழ் மக்களை, துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுவோம் என வனத்துறையினர் மிரட்டுவதாக கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர். பென்னாகரம் தாலுகா, ஒகேனக்கல் பண்ணப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஒகேனக்கல் பண்ணப்பட்டி வனப்பகுதியில், மூதாதையர் காலத்திலிருந்தே வசித்து வருகிறோம். பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த நாங்கள், கல் குகையில் வசித்து வந்தோம். ஒகேனக்கல் பண்ணப்பட்டியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட வன அலுவலர் பால்ராஜ், 20 தகரம் போட்ட வீடுகளை கட்டிக் கொடுத்தார். அதில் வசித்து வருகிறோம். கடந்த 17ம் தேதி காலை, நாங்கள் குடியிருக்கும் பண்ணப்பட்டி வீட்டிற்கு வனவர் காளியப்பன், வாட்சர் நந்தகோபால் ஆகியோர் வந்து, பண்ணப்பட்டி பகுதியை நீங்கள் காலி செய்ய வேண்டும்.