புற்றுநோயால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் மகள் உயிரிழப்பு !

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆசிப் அலி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இவர் இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் நடந்துவரும் பாகிஸ்தான் இங்கிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரது 2 வயது மகள் நூர் பாத்திமா. இவர் நான்காம் கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக; அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, நூர் பாத்திமா நேற்று உயிரிழந்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நேற்று விளையாடிய ஆசிப் அலிக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Related Stories: