அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வு

மும்பை: அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 136.8 கோடி டாலர் அதிகரித்து, 42,005 கோடி டாலராக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு கரன்சி மதிப்பு உயர்ந்ததே இதற்கு காரணம். யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் டாலரில் மதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே, இதில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கையிருப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. வெளிநாட்டு கரன்சி மதிப்பு 135.8 கோடி டாலர் உயர்ந்து 39,222.7 கோடி டாலராக அதிகரித்துள்ளது.  இதற்கு முந்தைய வாரத்தில் 17.19 கோடி டாலர் உயர்ந்து 41,868.7 கோடி டாலர் உயர்ந்திருந்தது. தங்கம் கையிருப்பு எந்த மாற்றமும் இன்றி 2,302.1 கோடி டாலராக உள்ளது. சர்வதேச நிதியத்தில் கையிருப்பு 335.1 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 42,602.8 கோடி டாலராக இருந்ததே அதிகபட்ச அளவாக உள்ளது.

Related Stories: