மயிலாடுதுறை : நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா மாதானம் முதல் மேமாத்தூரை வரை 29 கிமீ தூரத்துக்கு கெயில் நிறுவனம் எண்ணை எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு பல்வேறு இடங்களில் விவசாயிகளும் நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் விதை விட்டுள்ள நாற்றங்கால் பகுதியில் எல்லாம் பொக்லைன் மூலம் குழி பறித்த பயிர்களை நாசம் செய்துள்ளனர். இதையடுத்து உடனடியாக செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் முடிகண்டநல்லூர் கிராமத்தில் விவசாயிகள் பாலு, மோகன்தாஸ், சிவானந்தம் ஆகியோர் தங்கள் வயல்களில் குறுவை நடவு பணிகளை பொக்லைன் இயந்திரங்களை கொண்டு பள்ளம் தோண்டியபோது விவசாயிகள் தங்களது வயலில் இறங்கி உடலில் சேற்றினை பூசி போராட்டம் நடத்தியதால் தற்காலிகமாக பைப் போடும் பணி நிறுத்தப்பட்டது.