மதுரை : பிரசவத்திற்கு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. மதுரை வெள்ளரிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பிரியா. இவருக்கு நேற்று மதியம் பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. ஊருக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் பிரியாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்சில் சுகப்பிரசவத்தில் பிரியாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.