இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடை மே 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பிப்ரவரி மாதம் 26ம் தேதி இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பால்கோட்டில் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின.