கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட ஆண்டுத்தேர்வில் ஆங்கில பாடத்திற்கான தேர்வில் நீங்கள் எதிர்காலத்தில் யாராக ஆசைப்படுகிறீர்கள் ? உங்களின் முன்மாதிரி மனிதர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி மனோபிரியா என்ற மாணவி, எதிர்காலத்தில் நான் மாவட்ட கலெக்டராக விரும்புகிறேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட கலெக்டர்தான் என்று விடை எழுதியிருந்தார். விடைத்தாளை திருத்திய பள்ளி ஆசிரியர் பூபதி, இது குறித்து கலெக்டர் அன்பழகனுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தார். இந்த தகவலை பார்த்த கலெக்டர் அன்பழகன், மாணவி மனோப்பிரியாவின் கனவுக்கு அடித்தளம் மிடும் வகையிலும், அவரது எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அந்த மாணவியை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வர உத்தரவிட்டார்.