திண்டிவனம் அருகே வீட்டில் இருந்த ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வீட்டில் இருந்த ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். காவேரிப்பாக்கத்தில் ஏசியால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் தூங்கிக்கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜி என்பவர் காவேரிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். ராஜி அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்து வந்துள்ளார். அவருடன் மனைவி லதா, மகன் கவுதம் காவேரிபட்டினத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் ஒரு அறையில் இருந்த ஏ.சி. இயந்திரத்தில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் ராஜி, மனைவி லதா, மகன் கவுதம் ஆகிய மூவரும் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். தூக்கத்தில் இருந்ததால் மின்கசிவு அவர்களுக்கு தெரியவில்லை. மயக்க நிலையிலேயே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். ஏ.சி. இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: