விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வீட்டில் இருந்த ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். காவேரிப்பாக்கத்தில் ஏசியால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் தூங்கிக்கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜி என்பவர் காவேரிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். ராஜி அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்து வந்துள்ளார். அவருடன் மனைவி லதா, மகன் கவுதம் காவேரிபட்டினத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் ஒரு அறையில் இருந்த ஏ.சி. இயந்திரத்தில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.