சிஎப்ஓ விலகல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் ஒப்புதல்

மும்பை: நிதி நெருக்கடியால் முடங்கிய ஜெட் ஏர்வேஸின் தலைமை நிதி அதிகாரி (சிஎப்ஓ) அமித் அகர்வால் பதவி விலகினார். அவருடைய ராஜினாமா மே 13ம் தேதி ஏற்கப்பட்டதாகவும், சொந்த காரணங்களுக்காக அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியால் சில மாதங்களுக்கு முன்பு முடங்கியது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மத்தியில் தனது விமான சேவைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: