கோயில் வீட்டுமனை வாடகைதாரர்கள் சங்கம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு

சென்னை: தமிழக இந்து சமய திருக்கோயில்களின் வீட்டு மனை வாடகைதாரர்கள் சங்க தலைவர் லோகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டபிடாரம் திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பு சங்க சார்பாக தீர்மானம் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது. கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், நிலங்களில் குடியிருப்போர்   திமுக ஆட்சியில் போடப்பட்ட பல அரசாணை மூலமாக பயன்பெற்றோம். எனவே, வரும் 19ம் தேதி நடைபெறும் 4 சட்டசபை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து, திமுக ஆட்சி மலர வாய்ப்பளிப்பீர் என்று கூட்டமைப்பு சங்கம் வேண்டி கேட்டுக்கொள்கிறது.

Related Stories: