சென்னை: தமாகா தலைவர் ஜி.க.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, தொழில், விளையாட்டு என பல்வேறு துறைகளில் நிதியுதவி, கடன் உதவி, பதவி உயர்வு போன்றவற்றில் முன்னுரிமை கொடுத்து அவர்களை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தனி பயிற்சி மையம் அமைத்து, தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி அளித்து நாடு முழுவதும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும், உலக அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற ஊக்கமும், உதவிகளும் வழங்க வேண்டும்.