சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்கு சமம் என்று கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறஉள்ளது. பணத்தை முன்னிறுத்தி வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் தேர்தலாக இதுமாற்றம் கண்டுள்ளது. சட்டப்படி வாக்குக்குப்பணம் கொடுப்பதும், வாங்கிக் கொண்டு வாக்காளர்கள் வாக்களிப்பதும் குற்றம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதைப் பரவலாக பார்க்க முடிகிறது.