தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகில் உள்ள எம்.காளிபாளையம் கிராமத்தில் 150 குடும்பம் வசிக்கிறது. இக்கிராமத்தில் உள்ள வீடுகளில் திடீரென தீ பிடித்து எரிகிறது. திடீரென பற்றி எரியும் தீயால் துணிமணிகள், குழந்தைகளின் நோட்டுப்புத்தகங்கள் தீக்கிரையாகின. கடந்த 4 நாளாக இதுபோல 30 வீடுகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். நேற்று 4வது நாளாக இச்சம்பவம் தொடர்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வேலைக்குகூட செல்லாமல் மரத்தடிகளில் முடங்கி கிடக்கின்றனர்.இதுகுறித்து இக்கிராம மக்கள் கூறுகையில், ``கடந்த 4 நாட்களாக வீடுகளுக்குள் ஆங்காங்கே தீப்பற்றி எரிகிறது. போர்வை, தலையணை, துணிமணி, நோட்டுப்புத்தகம் என பொருட்கள் எரிந்து நாசமாகின்றன.
ஒரு வீட்டில் எரியும் தீயை அணைத்து விட்டு வருவதற்குள் அடுத்த தெருவில் உள்ள மற்றொரு வீட்டில் தீப்பிடித்து எரிகிறது, இதற்கு மந்திரவாதிகள் காரணம் என்று கிராமத்தில் பீதி நிலவுகிறது’’ என்று கூறினர்.