அம்பத்தூர்: சென்னை பாடி கோல்டன் காலனி, 4வது தெருவை சேர்ந்தவர் லீனாநாயர் (62). ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. தனியாக வசிக்கிறார். இவர், நேற்று முன்தினம் இரவு கீழ்தளத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு மாடியில் தூங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து கீழே வந்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த செயின், மோதிரம் உள்பட 20 சவரன் நகைகள் மற்றும் ₹5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கொரட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மற்றொரு சம்பவம்: அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் விரிவு, மாந்தோப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மலர்வண்ணன் (31). இவரது மனைவி திவ்யா (28). இவர்கள் இருவரும் அம்பத்தூர் சி.டி.எச். சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகின்றனர்.