இங்கிலாந்து: இங்கிலாந்தில் முன்விரோதம் காரணமாக ஐதராபாத் இளைஞரை குத்திக்கொன்ற பாகிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் பெர்க்ஷைர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக வேலைப்பார்த்து வந்த நடீம் உதின் ஹமீத் முகமத் கடந்த 8ம் தேதி, சூப்பர் மார்க்கெட் அருகிலுள்ள வாகன நிறுத்தும் இடத்தில் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்தநிலையில் சூப்பர்மார்க்கெட் வளாகத்திலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், பாகிஸ்தானை சேர்ந்த அகிப் பெர்வாய்ஸ் என்பவரை கைது செய்தனர்.