நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காரில் கடத்தப்பட்ட இளம்பெண் உயிரிழந்ததை விபத்து என்று கூறி போலீசார் வழக்குபதிவு செய்ய முயன்றதால் கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் கேசவம்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த 22 வயதான கவியரசி என்பவர் உயிரிழந்த அந்த இளம்பெண் ஆவார். கடத்தப்பட்ட இளம்பெண் உயிரிழந்ததை விபத்து என்று கூறி போலீசார் வழக்குபதிவு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த கேசவம்பாளையம் கிராம மக்கள் பொறையாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.