சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டி 1 கோடி ரூபாய் கொள்ளை

சென்னை: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டி 1 கோடி ரூபாயை பறித்து சென்ற கட்டபஞ்சயாத்து கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை கொளத்தூரை சேர்ந்த முகமது தாஹிர் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இவரை ராமகிருஷ்னன் மற்றும் துரைராஜ் என்பவர்கள் நில பிரச்சனை தொடர்பாக அணுகியபோது  அவர்களுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திருநெல்வேலியை சேர்ந்த ஜான்சன், இளங்கோ ஆகிய இருவரும் சென்னை வந்துள்ளதாக தெரிகிறது. துரைப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முகமது தாஹிர் மீது தாக்குதல் நடத்திய மூவரும் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அவரது மனைவியிடம் இருந்து 1 கோடி பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். காயமடைந்த தாஹிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த துரைப்பாக்கம் காவல்துறையினர் தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: