கோவை : கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்துார், நாச்சிபாளையம், அன்னூர், கிணத்துக்கடவு, சூலுார் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி பயிரிடப்பட்டு வருகிறது. இந்தாண்டு மழை இல்லாததாலும், வெப்பக்காற்று வீசிவருவதாலும் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஆர்வம் காட்டவில்லை.கோவைக்கு ராயக்கோட்டை, ஓசூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும் தக்காளி கொண்டுவரப்படுகிறது. வடமாநிலங்களிலும் தற்போது தக்காளிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவைக்கு அதிக அளவில் தக்காளி வரவில்லை.