பொள்ளாச்சி: சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மனைவி ஜெயசுதா. இவர்களது குடும்பம் மற்றும் உறவினர்கள் உட்பட 26 பேர் நேற்று முன்தினம் கேரளாவுக்கு சுற்றுலா செல்வதற்காக வேனில் வந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள ஓர் உணவு விடுதியில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினர் அம்பராம்பாளையம் வழியாகச் செல்லும் ஆழியார் ஆற்றில் குளிக்க சென்றனர்.
இதில் நான்கு சிறுவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களை மற்றவர்கள் மீட்க முயன்றனர்.