ராஜஸ்தான்: பாகிஸ்தான் வழியாக இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த சரக்கு விமானம் மடக்கிப் பிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து வந்த ஏ.என் 12 என்ற சரக்கு விமானம் ராஜஸ்தானுக்குள் நுழைந்தது. பாகிஸ்தானில் இருந்து வந்த விமானத்தை இந்திய விமானப்படை விமானங்கள் வழிமறித்து ஜெய்ப்பூரில் தரையிறக்கின. பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு சரக்கு விமானம் வந்தது ஏன் என்று இந்திய விமானப்படை விசாரணை நடத்துகிறது.