ஐதராபாத்: ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான இ- டிக்கெட்டுகள் 120 நொடிகளில் விற்றுத் தீர்ந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில், கள்ளச்சந்தைக்கு வழிவகுத்து கொடுத்திருப்பதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் வரும் 12-ம் தேதி ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்க உள்ளது. அந்த மைதானத்தில் 39 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கை வசதி உள்ளது என கூறப்படுகிறது. மேலும் ஆயிரம் ரூபாய் தொடங்கி 22 ஆயிரம் ரூபாய் வரை 9 வகையிலான டிக்கெட்டுகள் உள்ளன.